ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கச் செய்ததில் 'பீட்டா'வின் பங்கு மிக முக்கியமானது. அந்த அமைப்பை எதிர்த்து கடந்த வாரம் தமிழ்நாடு முழுவதும் கடுமையான போராட்டம் நடந்தது. தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் கூட ஜல்லிக்கட்டு நடைபெறாமல் போனதற்கு 'பீட்டா'தான் காரணம் என்பது புரிந்தது. தமிழ்நாட்டு மக்கள் பீட்டாவுக்கு எதிராக நடத்திய போராட்டம் தற்போது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. அங்குள்ளவர்களும் மாடுகள், எருதுகளை வைத்து அவர்கள் நடத்தும் கலாச்சார விளையாட்டிற்கு தடை விதிக்கக் காரணமாக இருந்த 'பீட்டா' அமைப்பை எதிர்த்து போராட்டத்தைத் துவக்கியுள்ளனர்.
ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற போது, நடிகர் சூர்யா 'பீட்டா'வை எதிர்த்து அறிக்கை வெளியிட்டும், பேசியும் இருந்தார். “போராடுகிறவர்களின் உணர்வோடு நானும் கை கோர்க்கிறேன்,” என்று அறிக்கை வெளியிட்டார். அதில் 'மாடுகளுக்கு எதிரானது' என்று பொய்ப் பிரச்சாசரம் செய்து நீதிமன்றத்தில் வெற்றியும் பெற்ற 'பீட்டா' அமைப்பு, மக்கள் மன்றத்தில் தோற்றிருக்கிறது. 'நாட்டு மாடு இனம்' அழிவதற்கு துணை போகிறார்கள், 'ஜல்லிக்கட்டு' மூலம் மாடுகள் வதை செய்யப்படுகின்றன என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது,” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
சூர்யா அப்படி சொன்னதற்காக அவருக்கு கண்டனம் தெரிவித்தது 'பீட்டா' அமைப்பு. 'சி 3' படத்தை விளம்பரப்படுத்துவதற்காகவே ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சூர்யா செயல்படுகிறார் என்றது. பீட்டா அமைப்பு அப்படி சொன்னதற்காக அவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை சூர்யா தரப்பிலிருந்து அனுப்பியிருந்தார்கள்.
அதற்கு பதிலளித்துள்ள பீட்டா, தங்களது தவறுக்கு பகிரங்கமான மன்னிப்பு கோரியிருந்தது. பீட்டா சார்பாக அதன் சிஇஓ பூர்வா ஜோஷிபுரா அதற்கான கடிதத்தை அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தை மீடியாவிற்கு அனுப்பிய சூர்யா தரப்பு 'பீட்டா பகிரங்க மன்னிப்பு' என்று பெருமைப்பட்டுக் கொண்டனர். ஆனால், அந்தக் கடிதத்தின் கடைசி பத்தியில் “ஜல்லிக்கட்டு தொடர்பாக விலங்குகள் நல வாரிய அமைப்பு எடுத்த வீடியோவின் லின்க்கையும் குறிப்பிட்டு, அதைப் பார்க்கும்படியும், விலங்குகள் நல வாரியம் அமைப்பு அளித்த அறிக்கையையும் படிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.
'சி 3' படத்தில் நேர்மையான, கடமை தவறாத காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறீர்கள். அந்த கதாபாத்திரத்தின் தன்மை, மிருக வதைத் தடுப்புச் சட்டம் 1960 எந்த அளவுக்கு கௌரவமானது, உறுதியான என்பதை உங்களுக்கு உணர்த்தும் என நம்புகிறேன். எனவே மறுபரிசீலனை செய்யுங்கள்,” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
சூர்யா தரப்பிலிருந்து 'பீட்டா' பகிரங்க மன்னிப்பு கேட்டதை மட்டுமே முதன்மைப்படுத்தியுள்ளார்கள். அதே சமயம், 'ஜல்லிக்கட்டு ஆதரவு நிலையை மறுபரிசீலனை செய்யுங்கள்' என்பதைப் பற்றி எந்த ஒரு பதிலையும் அளிக்கவில்லை.
பீட்டா சிஇஓ பூர்வா ஜோஷிபுராவின் கோரிக்கைக்கு சூர்யா என்ன பதில் தரப் போகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராடிய இளைஞர்களும், மாணவர்களும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.