மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, தனது மகன் ராம் சரணையும் மெகா ஸ்டார் அளவிற்கு உயர்த்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றார். இடையில் தொடர் தோல்வி படங்களில் சறுக்கிய ராம் சரணை அழைத்த சிரஞ்சீவி பிறமொழியில் வெற்றி பெற்ற படங்களில் எதையாவது தேர்வு செய்து அதன் தெலுங்கு ரீமேக்கில் நடிக்குமாறு ஐடியா கொடுத்தாராம். அந்த யோசனையின் படியே, தனி ஒருவன் திரைப்படம் ராம் சரண் நடிப்பில் துருவா திரைப்படமாக மாறி தெலுங்கிலும் ஹிட் அடித்தது. அந்த வகையில் அடுத்து ராம் சரணுக்கு பெரிய பட்ஜெட் படம் ஒன்றையும் சிரஞ்சீவி ஏற்பாடு செய்துள்ளார். பாலகிருஷ்ணாவின் 100வது திரைப்படமான கௌதமிபுத்ர சடர்கனி படத்தை இயக்கிய இயக்குனர் க்ரிஷை சந்தித்த சிரஞ்சீவி, ராம் சரணுக்கு ஏற்ற கதை கூறும்படி கேட்டுள்ளார். சிரஞ்சீவியின் வேண்டுகோளுக்கு இணங்க ராம்சரணிடம் தான் ஆரம்பித்து கைவிட்ட ராயபரி படத்தின் கதையை க்ரிஷ் கூற ராம் சரணுக்கு அக்கதை பிடித்துப்போக உடனே ஒகே சொல்லிவிட்டார். சுகுமார் படத்தை முடித்த பின்னர் க்ரிஷ் இயக்கும் ராயபரி படத்தில் ராம் சரண் நடிப்பார் என தெரிகிறது.