ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழகத்தில் சமீபத்தில் இளைஞர்கள் நடத்திய எழுச்சி போராட்டத்தில் ஜல்லிக்கட்டு மட்டுமல்லாது பீட்டாவை தடை செய்ய வேண்டும், வெளிநாட்டு குளிர்பானங்களை தடை செய்ய வேண்டும் என்று அதிகமாக குரல் கொடுத்தனர். மேலும் சமூகவலைதளங்களிலும் இந்த கருத்து ஓங்கி எதிரொலித்தது. மக்களும் ஓரளவுக்கு ஆதரவு கொடுத்தனர்.
இந்நிலையில், தங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தின் படப்பிடிப்புகளில் பெப்சி மற்றும் கோக் பயன்படுத்தப் போவதில்லை இயக்குநர் சிவி குமார் சமீபத்தில் அறிவித்தார். தற்போது இயக்குநர் ஏஆர் முருகதாஸூம் இதே கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இதுப்பற்றி முருகதாஸ் தன் டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது... ‛‛மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கத்தி படத்திற்கான கதையை எழுதும் போதே பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு பானங்களை குடிப்பதை நிறுத்திவிட்டேன். தற்போது நான் இயக்கும் படங்களின் ஷூட்டிங்கிலும் வெளிநாட்டு பானங்களை தடை செய்துள்ளேன்'' என தெரிவித்துள்ளார்.
முருகதாஸின் இந்த கருத்தை பலரும் வரவேற்றுள்ளனர். தற்போது முருகதாஸ் தெலுங்கில் மகேஷ்பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.