ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பல திரையுலக நட்சத்திரங்கள் ஆதரவு தெரிவித்ததோடு மட்டுமல்லாது, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு தண்ணீர், பிஸ்கட், சாப்பாடு ஆகியவற்றையும் அடிக்கடி கொடுத்து உதவினார்கள். களத்திற்கே சென்று ஆதரவு, டிவிட்டரில் ஆதரவு, நடிகர் சங்க போராட்டத்தில் ஆதரவு, அரைகுறையான ஆதரவு, எதுவுமே சொல்லாமல் அமைதி காத்தது என பல நடிகர், நடிகைகள் இருந்தார்கள்.
நடிகர் சங்கத்தினர் உண்ணாவிரதம் இருந்த போது, இயக்குனர் சேரன் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் சிலர் நடிகர் சங்க நிர்வாகிகளிடம் சென்று பீட்டாவில் உறுப்பினர்களாக உள்ளவர்களை உடனே அதைவிட்டு விலகச் சொல்லுமாறு கேட்டுக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தார்கள். போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே பீட்டா ஆதரவாளர்களாகக் கருதப்பட்ட த்ரிஷா, அந்த அமைப்பை விட்டு விலகுவதாக அறிவித்தார். தனுஷ், விஷால், ஆர்யா உள்ளிட்டவர்களும் அதில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அதை அவர்கள் உடனுக்குடன் மறுத்தார்கள்.
இருந்தாலும் இன்னமும் மாதவன், எமி ஜாக்சன், தமன்னா உள்ளிட்ட சில நட்சத்திரங்களும், மேலும் சிலரும் பீட்டா அமைப்பில் தொடர்கிறார்கள் என கோலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.
மாதவன் தற்போது நான்கைந்து தமிழ்ப் படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். எமி ஜாக்சன், ரஜினிகாந்த் ஜோடியாக 2.0 படத்தில் நடித்து வருகிறார். தமன்னாவும் புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர்கள் தொடர்ந்து பீட்டா ஆதரவாளர்களாக இருந்தால் இவர்கள் நடித்து வெளிவரும் படங்களின் தயாரிப்பாளர்கள் பாதிக்க வாய்ப்பிருக்கலாம் என்கிறார்கள். அதைப் புரிந்து கொண்டு நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.