தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்சினிமாவில் காலம்காலமாக கதை பஞ்சம் நிலவுகிறது. வெளிநாட்டு படங்களை காப்பி செய்யும் இயக்குநர்களுக்கு சினிமாவுக்கு பொருத்தமான நல்ல நல்ல கதைகள் நாவல்களில் கொட்டிக்கிடப்பது தெரியவில்லை. இதை தெரிந்து வைத்திருக்கும் இயக்குநர்களில் வெற்றிமாறனும் ஒருவர்.
சந்திரகுமார் எழுதிய லாக்கப் என்ற நாவலை மையப்படுத்தி விசாரணை படத்தை இயக்கி மிகப்பெரிய பாராட்டைப் பெற்றார் வெற்றிமாறன். லாக்கப் நாவலை படமாக்கியதைப்போலவே தற்போது சி.எஸ்.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற நாவலை மையப்படுத்தி படமொன்றை இயக்க இருக்கிறார் வெற்றிமாறன். விசாரணை படத்தைத் தொடர்ந்து தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் வடசென்னை படத்தை தற்போது இயக்கி வரும் வெற்றிமாறன், அப்படத்தைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.
இந்தப்படத்தை ஸ்ரீக்ரீன் புரடக்ஷன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கிடையில் சி.எஸ்.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலின் உரிமையை வாங்கியுள்ளார் வெற்றிமாறன். இந்தக்கதைக்கு திரைக்கதை எழுதி முடித்த பிறகு விரைவில் இந்தப் படத்தை இயக்கவும் திட்டமிட்டுள்ளார்.