விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
நூற்றுக்கணக்கான படங்களுக்கு சவுண்ட் எபெக்ட் கொடுத்திருப்பவர் ராண்டி ராஜ். என்னைப்போன்ற சவுண்ட் எபெக்ட் கலைஞர்கள் ஒவ்வொரு படங்க ளுக் காகவும் கடுமையாக உழைக்கிறோம். ஆனால் எங்களது உழைப்பின் பலன் இசையமைப்பாளர்களுக்கே போய் விடுகிறது என்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், நான் எப்போது சவுண்ட் எபெக்ட் கலைஞராக பணியாற்றத்தொடங்கினேனோ அப்போதில் இருந்தே சவுண்ட்களை சேகரிக்கும் வேலைகளில் முழுசாக இறங்கி விட்டேன். வெளியில் எங்கு சென்றாலும், அங்கு வாகனங்கள் செல்வது. வித்தியாசமான சப்தங்கள் கேட்பதை உடனே ரெக்கார்டு செய்து கொள்வேன். சில சமயங்களில் மரங்களின் அசைவுகள், அங்கே முகாமிட்டிருக்கும் பறவைகளின் குரல்களையும் பதிவு செய்வேன்.
சமீபத்தில் ஒரு தியேட்டருக்கு சென்றேன். அங்கே தேசிய கீதம் இசைக்கப்பட்டு, பின்னர் அனைவருமே ஒரேநேரத்தில் சேரில் அமர்ந்தனர். அத்தனை பேரும் உட்காரும் அந்த சவுண்டை எனது செல்போனில் பதிவு செய்து கொண்டேன். இதுபோன்று நான் பதிவு செய்வதெல்லாம் படங்களுக்கு நான் சவுண்ட் எபெக்ட் கொடுப்பதற்கு பயன்படுத்திக்கொள்வேன். என்னதான் எலக்ட்ரானிக் மையமாகி விட்டபோதும் இந்த மாதிரி லைவ் சவுண்ட்டுகள் ரொம்ப யதார்த்தமாக இருக்கும்.
மேலும், பேய், ஆக்சன் படங்களில் எங்களது பங்களிப்பு அதிகமாக இருக்கும். ஆனால் அப்படி நாங்கள் கொடுக்கும் சவுண்ட் எபெக்ட் எங்களுக்கு பெயர் வாங்கித்தருவதில்லை. அந்தந்த படங்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளருக்குத்தான் கிடைக்கிறது. சண்டை காட்சிகளில் கும் கும்மென்று நாங்கள்தான் சவுண்ட் கொடுத்திருப்போம். ஆனால் சூப்பர் மியூசிக் என்பார்கள். அதேபோல், பேய் படங்களில் பேய் என்ட்ரி கொடுப்பதற்கு முன்பே காற்று உள்ளிட்ட பயமுறுத்தும் சவுண்டை நாங்கள்தான் கொடுப்போம். ஆனால் அதைக்கேட்டு மியூசிக் டைரக்டர் மிரட்டியிருக்கிறார் என்பார்கள். ஆக, பின் னணியில் இசையில் பெரும்பங்கு என்னைப்போன்ற சவுண்ட் எபெக்ட் கலைஞர்களுக்கு இருந்தும் நாங்கள் வெளியில் தெரிவதில்லை இதுதான் வருத்தம் தரும் விசயமாக உள்ளது.
இப்படியிருக்கிற சூழ்நிலையில், சமீபகாலமாக கேரளாவில் இருந்து வந்து தமிழ்ப்படங்களை தயாரிப்பவர்கள், பெப்சியில் இடம்பெறாத கேரளத்து சவுண்ட் எபெக்ட் கலைஞர்களை அழைத்து வந்து தமிழ்ப்படங்களுக்கு பதிவு செய்கிறார்கள். இது என்னைப்போன்ற தமிழ் சினிமாவை நம்பியிருக்கும் கலைஞர்களை ரொம்பவே பாதிக்கிறது. அதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நடவடிக்கை எடுக்கும் முயற்சிகள் விரைவில் நடைபெற உள்ளது என்கிறார் ராண்டி ராஜ்.