ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள திரையுலகில் இப்படி ஒரு அதிரடி மாற்றம் வரும் என யாரும் கனவில் கூட எதிர்பார்க்கவில்லை.. குறிப்பாக கேரளா தியேட்டர் அதிபர்களும் கேரள சினிமா எக்சிபிடர்ஸ் சங்கமும் கொஞ்சம் கூட நினைத்தே பார்க்கவே இல்லை.. வழக்கம்போல அதிக பங்கு வேண்டும் என தாங்கள் நடத்தும் போராட்டத்துக்கு தயாரிப்பாளர்கள் பணிந்துவிடுவார்கள் என்றே இந்த எக்சிபிடர்ஸ் சங்க தலைவர் லிபர்ட்டி பஷீர் தப்புக்கணக்கு போட்டார்.. இதனால் கடந்த ஒரு மாத காலமாக கேரளாவில் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஆனால் இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அதேசமயம் லிபர்ட்டி பஷீருக்கு பணிந்தும் போகமால் பிரச்சனையை தன் கையில் எடுத்துக்கொண்டார் நடிகர் திலீப். தயாரிப்பளர்களின் ஒப்புதலுடன், இந்த போராட்டத்தில் விருப்பம் இல்லாத தியேட்டர் அதிபர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை ஒருங்கிணைத்து இதோ இப்போது புதிய எக்சிபிடர்ஸ் சங்கத்தை தொடங்கிவிட்டார் திலீப்.. திலீப் தயாரிப்பாளராகவும், தியேட்டர் அதிபராகவும் இருப்பதால் இந்தப்பிரச்சனையை அவரால் சுலபமாக கையாள முடிந்தது.
நேற்று முன்தினம் இருந்து செயல்பட தொடங்கிய இந்த சங்கத்தின் தலைவராகவும் திலீப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது புதிய சங்கத்தின் கீழ் தொண்ணூறு சதவீத தியேட்டர்கள் இணைந்துவிட்டனவாம். அதேசமயம் லிபர்ட்டி பஷீருக்கு சொந்தமான லிபர்டி தியேட்டர் மற்றும் அவரது தீவிர ஆதரவாளர்களின் தியேட்டர்களை இந்த சங்கத்தில் சேர்த்துக்கொள்வதில்லை என்கிற முடிவும் எடுக்கப்பட்டுள்ளதாம்..