ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தொடர்ந்து ஆக்ஷன் மற்றும் மசாலா படங்களில் நடித்து வந்த ராம் சரண், துருவா படத்திற்கு பின்னர் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கப்போவதாகக் கூறினார். அதன்படி இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கிராமத்து நாயகனாக ராம் சரண் நடிப்பதாகவும் இப்படத்தில் நடிகை அனுபமா நாயகியாக நடிப்பதாகவும் கூறப்பட்டது. அனுபமாவும் ராம் சரண் - சுகுமார் படத்தில் நடிக்கவிருப்பதாக டுவிட்டரில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இப்படத்தின் நாயகி அனுபமா மாற்றப்பட்டு சமந்தா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. விரைவில் நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் சமந்தா திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டாலும் சில படங்களில் நடிக்க சம்மதம் தெரிவிக்கின்றார். அந்த வகையில் ராம் சரண், சமந்தாவை தேர்வு செய்ததற்கான காரணம் விரைவில் சமந்தா திருமணம் செய்துகொள்ளவிருப்பது தான் என்று கூறப்படுகின்றது.
தெலுங்கில் ஏழு வருடங்களாக முன்னணி நடிகையாக விளங்கும் சமந்தா, ராம் சரணுக்கு ஜோடியாக இதுவரை நடிக்கவில்லை. எனவேதான் அனுபமாவை நீக்கிவிட்டு சமந்தாவை ஒப்பந்தம் செய்ய ராம் சரண் கூறியுள்ளாராம். ராம்சரண் படத்திலிருந்து தான் நீக்கப்பட்டதை அனுபமா டுவிட்டரில் சூசகமாக தெரிவித்துள்ளார்.