டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ்நாட்டில் தமிழ்த் திரைப்படங்களைத் திரையிடுவதற்கே தியேட்டர்கள் கிடைக்காமல் பல பெரிய தயாரிப்பாளர்கள், சிறிய தயாரிப்பாளர்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் கடந்த சில வருடங்களாக ஆங்கிலத் திரைப்படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டார்கள். சில படங்கள் நேரடித் தமிழ்ப் படங்களை விட நல்ல வசூலைப் பெற்றன. அதைப் பார்த்த ஹிந்தித் திரையுலகில் உள்ள 'கார்ப்பரேட்' கம்பெனிகளும் அவர்கள் தயாரிக்கும் ஹிந்திப் படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிட ஆரம்பித்தன. வருடத்திற்கு ஒரு சில படங்கள் மட்டுமே அப்படி வந்த சூழ்நிலையில் தற்போது பல படங்கள் வர ஆரம்பித்துவிட்டன.
கடந்த வருடக் கடைசியில் டிசம்பர் 23ம் தேதி, ஆமீர்கான் நடித்து வெளிவந்த 'தங்கல்' திரைப்படம் அப்போது வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களைக் காட்டிலும் அதிகம் வசூலித்தது. தமிழ்நாட்டில் பல சிறிய ஊர்களில் கூட பொங்கல் வரையும் அந்தப் படம் ஓடிக் கொண்டிருந்தது.
தமிழிலேயே பெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வரும் போது அடுத்த கட்ட நடிகர்களின் படங்களைத் திரையிடவும், சிறிய தயாரிப்பாளர்களின் படங்களைத் திரையிடவும் தியேட்டர்கள் கிடைப்பதில்லை. இன்று ஷாரூக்கான் நடித்துள்ள 'ரயீஸ்' ஹிந்திப் படமும், ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள 'காபில்' ஹிந்திப் படமும் தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான தியேட்டர்களில் வெளியாகின்றன. அதிலும், சென்னை மற்றும் புறநகர்களில் மட்டும் இரண்டு படங்களும் சுமார் 100 தியேட்டர்களில் வெளியாகின்றன. 'காபில்' படத்தை தமிழில் 'பலம்' என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.
கர்நாடகாவில் கன்னடப் படங்களைக் காப்பாற்றிக் கொள்ள, வேற்று மொழிப் படங்களை வெளியிட ஒரு கட்டுப்பாடு வைத்துள்ளனர். அப்படியான கட்டுப்பாடு தமிழ்த் திரையுலகத்தில் வந்தால் மட்டுமே இன்னும் இங்கு வெளியாகாமல் இருக்கும் நூற்றுக்கணக்கான படங்களையும், அதில் போட்டுள்ள பல கோடி முதலீட்டையும் காப்பாற்ற முடியும் என்கிறார்கள். தமிழ்த் திரைப்பட கூட்டமைப்பினர் இதற்கு வழி வகை செய்வார்களா.?