Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கலக்கத்தில் 'சி 3' படக்குழுவினர்

25 ஜன, 2017 - 10:54 IST
எழுத்தின் அளவு:
Singam-3-team-fears

'S 3' என்று படம் ஆரம்பிக்கும் போது விளம்பரப்படுத்தப்பட்ட 'சிங்கம்' படத்தின் மூன்றாம் பாகம், பின்னர் 'C 3' என்று அழைக்கப்பட ஆரம்பித்தது. தமிழில் 'சி 3' என்றும் பலரும் கூற ஆரம்பித்தார்கள். ஆனால், நேற்று தயாரிப்பு நிறுவனத் தரப்பிலிருந்து படத்தை 'C 3' என்று அழைக்க வேண்டாம், 'Si 3' என்று சொல்லுங்கள் என கூறினார்கள். ஆனால், சராசரி ரசிகரை எப்படி குழப்பினாலும், 'சிங்கம் பார்ட் 3' என்றுதான் அவர்கள் சொல்கிறார்கள்.


'சி 3' படம் நாளை 26ம் தேதி ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தெலுங்கிலும், தமிழ்நாட்டிலும், உலகம் முழுவதும் என 1500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிடுவதாக இருந்தார்கள். தெலுங்கு மாநிலங்களில் பொங்கலின் போது வெளிவந்த 'கைதி நம்பர் 150, கௌதமிபுத்ர சட்டகர்னி, ஷதமானம் பவதி' ஆகிய மூன்று படங்களுமே இன்னும் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால் 'சி 3' படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.


இதனிடையே, 'சி 3' படம் காவல்துறை சம்பந்தப்பட்ட படம். மேலும், 30 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கலவரத்தை அடிப்படையாகக் கொண்ட கதை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஜல்லிக்கட்டு பேராட்டத்தில் காவல் துறையினரின் அத்து மீறல்கள் குறித்து மீடியாக்களும், பொதுமக்களும் விமர்சித்து வருகிறார்கள்.


அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் காவல் துறை சம்பந்தப்பட்ட 'சி 3' படம் மக்களின் உணர்வுகளோடு தொடர்புபடுத்தி வருவதால் படத்தின் வசூலைப் பாதிக்கும் என வினியோகஸ்தர்கள் சொன்னார்களாம். அதனால்தான் படத்தின் வெளியீட்டை பிப்ரவரி மாதத்திற்குத் தள்ளி வைத்துவிட்டார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போராட்டம் நிறைவுறும் நாளன்று 'சி 3' குழுவினர் வெளியிட்ட “மக்களோடு மக்களாக கைகோர்த்து நிற்கும் காவல் துறையினருக்கு தலை வணங்குகிறோம்,” என்ற விளம்பரமும் சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.


சூர்யா நடித்து இதற்கு முன்பு வெளியான படங்கள் வியாபார ரீதியாக தோல்விப் படங்களாக அமைந்ததால் 'சி 3' படத்தை அவசரப்பட்டு வெளியிட வேண்டாம் என்றும் தயாரிப்பு தரப்பில் முடிவெடுத்துள்ளார்களாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in