ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மாணவர்கள், இளைஞர்கள் இணைந்து நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. அதுபற்றி இயக்குனர் பாரதிராஜா எழுதியுள்ள கவிதை வருமாறு:
ஆறுவது சினம் - கூறுவது தமிழ்..
சிதறிக்கிடந்த நம் தமிழனை
திமிறி எழ வைத்தது
திமில்..
உயிரெழுத்து, மெய்யெழுத்து,
உயிர்மெய்யெழுத்து அத்தனையும்,
ஆயுத எழுத்தாய் மாற்றியது
தமிழ்ஞ்.
நாடு சேர்க்காததை
மாடு சேர்த்தது..
பண்பாடு எனும்
கலாச்சாரம் தான்
தமிழனை ஓர் அணியில் கோர்த்தது..
உரசும் வரை தீக்குச்சிஞ்
உரசிய பின் நெருப்பு
தமிழா - நீ நெருப்புஞ்
பிரிக்கப்பட்ட மாவட்டங்கள்
பாரம்பரியத்தால் ஒன்றானதுஞ்
ஒருமித்த ஒற்றைக்குரலில்
ஒற்றுமைக்குத் தமிழன் என்றானது..
பண்டைய தமிழ் பண்பாட்டை
ஆண்ட்ராய்டு இளைஞன்
மீட்டெடுத்தான்ஞ்.
கணிப்பொறியில் இருந்தாலும்
கலப்பைத் தமிழன் என்பதை
நிரூபித்தான்..
முன்பு - மனுநீதி கேட்டு
மன்றாடியது மாடு..
இன்று மாட்டுக்காக
நீதிகேட்டு ஒன்றாகியது
தமிழ்நாடு..
மாணவர்களெல்லாம் மாவீரர்களாய்
மாநிலம் முழுவதும் குவிந்ததை
கண்டு மகிழ்ச்சியடைகிறேன்..
உன் சாத்வீகப் போராட்டம்
எனக்கு சந்தோசத்தை தந்தாலும்,
சில புல்லுறுவிகளால்
சில சங்கடங்களைத்
தந்திருக்கிறது..
உன் அறப்போர்
அகிலத்தையே ஆட்டி வைத்தாலும்
உன் தடத்தில் சில தவறானவர்கள்
தடம் பதித்திருக்கிறார்கள்ஞ்
நீ தேர்ந்தெடுத்த அரசாங்கம்
உன் சொற்படிக்கேட்டு
டெல்லிவரை சென்று வந்தது...
நீதியின் கைகளிலிருந்த
பேனாவைப் பிடுங்கி
தமிழர்களே தீர்ப்பெழுதியிருக்கிறார்கள்ஞ்
இது ஜனநாயகத்திற்குக் கிடைத்த
முதல் வெற்றிஞ்
மக்களுக்குத்தான்
சட்டமேயொழிய,
சட்டத்திற்கு
மக்களல்ல என்பதை
இந்தத் தீர்ப்பு,
சாட்சி சொல்லியிருக்கிறதுஞ்
உன் ஆணித்தரமான அகிம்சை சம்மட்டியடி
அரசியல்வாதிகளை ஆட்டம் காண
வைத்திருக்கிறது என்பதை
நீயே உணருகிறாய்ஞ்
உன் பாரம்பரியத்தை
பாரதத்தாயே ஆதரித்து விட்டாள்..
அவசரச் சட்டம்
சில நாட்களில்
நிரந்தரமாக்கப்படும்ஞ்
இல்லையேல்,
உன் உரிமைச்சங்கை
மறுபடியும் நீயே ஊதலாம்ஞ்
மாணவர்களே,. தமிழர்களே..
அகிம்சைப் புரட்சியின் மூலம்
தமிழகத்தை மீண்டும் அகிம்சை நாடு
என்பதைக் ஆணித்தரமாக
சொல்லியிருக்கீறீர்கள்..
வன்முறையென்ற வார்த்தை
நம் தேச வரைபடத்திலிருந்தே
விலக்கி வைக்கப்பட்டுள்ளது..
ஆனால்.. உன் வெற்றியின் வெளிச்சத்தில்
சில இருட்டுகள் விலாசம்
தேடுகின்றன..
உன் விரல் பிடித்துக்கொண்டு
சில விபரீதங்கள் வினையை
விதைக்கின்றன...
தமிழா - நீ வெற்றி பெற்றுவிட்டாய்..
இன்னும் ஏன் போராட்டம்..?
விழித்துக்கொள் தமிழா..
வீரமிகு மாணவனே..
உன் எழுச்சிப் புரட்சிக்கு மீண்டும்
என் நன்றி..
வாடிவாசல் திறக்கப்பட்டது..
திமிறி எழுகின்றன காளைகள்..
பண்பாடு மீட்கப்பட்டது..
புன்னகையோடு புலரும்
இனி வரும் காலைகள்..
இனி நீயே எழுதலாம்
புதிய வரலாறு..
இந்திய தேசியக் கொடியை
நம் கைகளே - நிமிர்ந்து
ஏற்றட்டும்..
நம் தலைமைக்குப் பெயர்
தமிழ்..
மீண்டது,
திமில்..