'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி |
அச்சம் என்பது மடமையடா படத்தையடுத்து தனுஷ் நடிக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை இயக்கி வருகிறார் கெளதம்மேனன். இதையடுத்து ஏற்கனவே சூர்யாவுக்காக ரெடி பண்ணிய துருவ நட்சத்திரம் கதையை விக்ரமை வைத்து இயக்கவும் தயாராகிக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்பும் விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது.
இந்த நிலையில், துருவ நட்சத்திரத்தை இயக்கும்போதே மலையாள நடிகர் நிவின்பாலியை வைத்து இன்னொரு படத்தையும் கெளதம்மேனன் இயக்குவதாக தற்போது புதிய செய்தி வெளியாகியுள்ளது. நிவின்பாலி இரண்டு வேடங்களில் நடிக்கும் அந்த படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்கயிருப்பதாகவும் சொல்கிறார்கள். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 2.ஓ படத்திலேயே வில்லனாக நடிக்க விருப்பம் தெரிவித்திருந்த விக்ரமிற்கு அந்த வாய்ப்பு கிடைக்காத நிலையில், இந்த படத்தில் நடிக்க கெளதம்மேனன் கேட்டதும், மறுபேச்சின்றி ஓகே சொல்லிவிட்டாராம்.