ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் பிரபல நடிகர்களில் அபிஷேக் பச்சனும் ஒருவர். சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் கூடைப்பந்து வீரரான சாத்னாம் சிங் பமாரா, தன்னுடைய வாழ்க்கை வரலாறு படமானால் அதில் தனது ரோலில் அபிஷேக் பச்சன் தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு தனது டுவிட்டர் மூலம் நேற்று பதில் அளித்தார் அபிஷேக். அதில், "சாத்னாம் சிங் பமாரா ரோலில் நான் நடித்தால் அது எனக்கு கிடைத்த பெருமையாக நினைப்பேன். ஆனால் ஒரு நிபந்தனை, படத்தில் நான் நடிக்க வேண்டும் என்றால் சாத்னாம் என்பிஏ., போட்டியில் சாம்பியன் பட்டம் பெற வேண்டும். அப்படி அவர் பட்டம் வென்றால் நான் சம்பளம் எதுவும் வாங்காமல் நடிக்கிறேன். என்னுடைய சம்பள தொகையை ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக அளிக்கலாம்'' என்று கூறியிருக்கிறார்.