பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சிவாஜியின் மகன்களான ராம்குமாரும், நடிகர் பிரபுவும் இன்று வரை ஒற்றுமையாக சிவாஜி புரடக்ஷன்ஸ் என்ற பேனரில் தான் படங்களை தயாரித்து வருகின்றனர். சிவாஜி குடும்பத்தின் அடுத்த தலைமுறையான விக்ரம் பிரபு, ராம்குமாரின் மகன் துஷ்யந்திடம் இந்த ஒற்றுமை இல்லாமல்போய்விட்டது. தனக்காக புதிய பட நிறுவனம் தொடங்கி நெருப்புடா என்ற படத்தை தயாரித்து வருகிறார் விக்ரம் பிரபு.
துஷ்யந்தோ 'இஷான் புரொடக்ஷன்ஸ்' என்ற பட நிறுவனம் தொடங்கி காளிதாஸ் ஜெயராம் நடித்த 'மீன் குழம்பும் மண் பானையும்' படத்தை தயாரித்தார். அந்தப் படம் தோல்வியை தழுவியது. 'மீன் குழம்பும் மண் பானையும்' படத்தை தொடர்ந்து 'இஷான் புரொடக்ஷன்ஸ்' இரண்டாவது படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கிறார்.
'மாவீரன் கிட்டு' படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் தற்போது நடித்து வரும் படம் 'கதாநாயகன்'. இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக கேத்ரின் தெரெசா நடிக்கிறார். முருகானந்தம் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார். கதாநாயகன் படம் முடிந்ததும் விஷ்ணு விஷாலை வைத்து முருகானந்தம் மீண்டும இயக்கும் ஒரு படத்தை துஷ்யந்த் ராம் குமாரின் 'இஷான் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடந்து வருகிறதாம்!