புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
மோ படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கட்டப்பாவை காணோம், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், முப்பரிமாணம் ஆகிய படங்கள் ரிலீசாக உள்ளன. இதையடுத்தும் சில புதிய படங்களில் அவர் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், மலையாளத்திலும் அவர் நடித்து வருகிறார்.
இதுபற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், தமிழில் பல படங்களில் நடித்து விட்டேன். எனக்கென்று ஒரு அடையாளம் கிடைத்து விட்டது. குறிப்பாக, எந்தமாதிரியான வேடங்களிலும் இவர் நடிப்பார் என்ற பெயரும் கிடைத்து விட்டது. அப்படி நான் நடித்த படங்களைப்பார்த்து விட்டுத்தான் மலையாளத்தில் துல்கர்சல்மான் நடித்த ஜாமுண்டே சுவிசேஷங்கள் படவாய்ப்பு கிடைத்தது. சமீ பத்தில் திரைக்கு வந்துள்ள அந்த படத்தில் எனது நடிப்பு பேசப்பட்டு வருகிறது.
அதைத்தொடர்ந்து நிவின் பாலி நடிக்கும் ஷக்காவு என்ற படத்தில் நடித்து வருகிறேன். இந்த படத்தில் மேலும் சில நாயகிகள் இருந்தபோதும், எனக்கான கேரக்டர் பிடித்திருந்தது. என்னைப்பொறுத்தவரை எத்தனை நடிகைகள் படத்தில் இருந்தாலும் கவலைப்படமாட்டேன். எனக்கான கேரக்டர் பிடித்திருந்தால் நடித்து விடுவேன். இதையடுத்தும் சில படங்களில் நடிக்க கதை கேட்டுள்ளேன் என்று கூறும் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு நீண்டநாளாக நிறைவேறாத ஒரு ஆசை உள்ளதாம். அது என்னவென்றால், தனது தாய்மொழியான தெலுங்கில் நடிக்க வேண்டும் என்பதுதான் அது. இப்போது தமிழ், மலையாளத்தில் நடித்துவரும் நான் விரைவில் தெலுங்கிலும் நடித்து விட்டால், எனது ஒரு பெரிய ஆசை நிறைவேறி விடும் என்கிறார் அவர்.