பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
கமல்ஹாசனே காதல் இளவரசன் என்று பட்டம் கொடுக்கும் அளவுக்கு காதல் கதைகளாக நடித்து வந்த ஆர்யா, தற்போது மஞ்சப்பை ராகவன் இயக்கியுள்ள கடம்பன் படத்தில் அதிரடியான ஹீரோவாக உருவெடுத்துள்ளார். இந்த படத்தில் நடித்துள்ள பழங்குடியின கேரக்டருக்காக தனது உடல்கட்டை மாற்றி நடித்திருக்கும் அவர், பாங்காங்கில் 60 யானைகளுடன் பல காட்சிகளில் இணைந்து நடித்திருக்கிறார். அதனால் இந்த படம் தனது கேரியரில் வித்தியாசமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கிறார் ஆர்யா.
இதையடுத்து அமீர் இயக்கும் சந்தனத்தேவன் படத்தில் மாடுபிடி வீரராக நடிக் கிறார் அவர். முந்தைய படத்தில் யானைகளுடன் நடித்தவர் இந்த படத்தில் மாடுகளுடன் நடிக்கிறார். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு பொங்கல் முடிந்ததும் ஜனவரி 15-ந்தேதி தேனி, மதுரை பகுதிகளில் நடப்பதாக இருந்தது. ஆனால் ஜல்லிக்கட்டு விவகாரம் காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைத்த அமீர், தற்போது பிப்ரவரி மாதம் 5-ந்தேதி முதல் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளாராம்.