டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமூக வலைத்தளங்களின் மூலம் இளைஞர்களை பல நல்ல விஷயங்களுக்காக எப்படி ஒன்றிணைக்க முடியும் என்பதை 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மாபெரும் வெள்ளத்தின் போது செய்து காட்டியவர்கள் நடிகர் சித்தார்த் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி. அவர்கள் இருவரும் ஆரம்பித்த 'சென்னை மைக்ரோ' என்ற பெயரில் முன்னெடுத்துச் சென்ற உதவி அவர்கள் இருவரைப் பற்றியும் அப்போது பெரிய அளவில் பேச வைத்தது. இருவரும் அதற்காக அப்போது சில விருதுகளைக் கூட வாங்கினார்கள்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஆர்.ஜே.பாலாஜி முதலிலிருந்தே உற்சாகத்துடன் கலந்து கொண்டார். சில நாட்களுக்கு முன் ஆவேசமாகவும் பேசினார். நேற்றும் இன்றும் நாம் வெற்றி பெற்றுவிட்டோம், எனவே போராட்டத்தைத் தொடர வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஆரம்பமான நாளிலிருந்து அது பற்றி எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காத சித்தார்த் நேற்று திடீரென ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றது குறித்து டிவீட் செய்திருந்தார்.
இன்று, “உங்களையும், உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். வேறு யாரும் உங்களை அடிப்பதற்கு உரிமை கிடையாது. இந்தப் பேராட்டத்தில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள். போராட்டத்தை இழந்துவிடாதீர்கள். சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்பாதீர்கள். எதையும் உறுதி செய்து கொள்ளாமல் பரப்பாதீர்கள். அமைதியாகவும், பொறுப்பாகவும் இருங்கள்.
கோபம் கும்பலை தவறான வழிக்கு பொறியைக் கிளப்பிவிட்டுவிடும். நீங்களாகவே யோசித்து செயல்படுங்கள். உங்கள் உரிமையைக் காத்துக் கொள்ள சண்டையிடுங்கள். அமைதியும், வன்முறை இல்லாததும்தான் அதற்கு ஆதாராம். இந்த சமயத்தில் மற்ற பிரச்சனைகளுக்காக ஆதாயத்தைத் தேடிக் கொள்ள சிலர் முயற்சிப்பார்கள், அதை நிறுத்துங்கள். இது ஜல்லிக்கட்டுக்கான போராட்டம், மக்கள் வென்றுவிட்டார்கள்.
அவசரச்சட்டம் வந்தது சாதாரண சாதனையல்ல. யார் கோபத்தைத் தூண்டினாலும் அதை உங்கள் பக்கம் வைத்துக் கொள்ளாதீர்கள். நீங்களும் தலைவர்தான், தலைமை ஏற்றுக் கொள்ளுங்கள்,” என போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.