ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஒன்பது வருட இடைவெளிக்கு பின்னர் கைதி நம்பர் 150 படத்தின் வாயிலாக மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். தமிழில் ஹிட்டான கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கைதி நம்பர் 150 படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இயக்குனர் விவி விநாயக் இயக்கி கைதி நம்பர் 150 படம் வசூலிலும் லாபம் பார்த்து வருகின்றது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனது நடிப்பில் திரைப்படம் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளதால்,சிரஞ்சீவி தனது மனைவி, மகள் மற்றும் மருகனுடன் சித்தூரில் உள்ள ஸ்ரீகாளகஸ்தி கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை மற்றும் பிரார்தனை செய்துள்ளார். சிரஞ்சீவியைக் காண ரசிகர் கூட்டம் கூடியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. காவலர்கள் உதவியுடன் சிரஞ்சீவி சாமி தரிசனம் செய்துவிட்டு கிளம்பி சென்றார்.