தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 7 நாட்களாக போராட்டம் நடந்து வந்த நிலையில், பல ஊர்களுக்கு நேரடியாக சென்று போராட்ட களத்தில் போராடியவர் ஜிவி பிரகாஷ் குமார். தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரலும் கொடுத்து வந்தார். இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டும் சென்னை, மதுரை உள்ளிட்ட சில ஊர்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். சில இடங்களில் வன்முறை சம்பவம் நடந்தது.
இந்நிலையில் இதுப்பற்றி ஜி.வி.பிரகாஷ்குமார் கூறியிருப்பதாவது... “அரசுகள் உங்களாலே அவசர சட்டம் இயற்றி பணிந்தது, போராட்டம் வரலாறு ஆனது. இன்னும் தீர்க்கப்படாத நிறைய பிரச்சனைகள் முன்னெடுத்து செல்ல வேண்டியவர்கள் நீங்களே. தமிழக மக்களின் மிச்சமிருக்கும் ஒரே நம்பிக்கை என் அன்பு சகோதர சகோதரிகளே நீங்கள் மட்டுமே. தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார். அதோடு, வன்முறை சம்பவம் தொடர்பாக அவர் பேசுகையில், காவல்துறைக்குப் பயிற்சியளிக்கும் போது, "கல்" எறிய கற்றுத் தருகிறார்களா..? தலைமையில்லாமல் தானாக முன்வந்து தங்கள் உரிமைக்காக மக்களே போராடும் போது, அதை அரசு எப்படி அணுக வேண்டும்..?” என்று கூறியுள்ளார்.