Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போராட்ட பின்னணியில் வேறு சில அமைப்புகள் உள்ளே வந்துள்ளது - ராகவா லாரன்ஸ்

23 ஜன, 2017 - 14:06 IST
எழுத்தின் அளவு:
Lawrence-trying-to-compramising-Marina-protest

மாணவர்கள் நடத்தியவரை போராட்டம் அமைதியாக இருந்தது. ஆனால், இப்போது வேறு வேறு அமைப்புகள் உள்ளே வந்துள்ளது என்று ராகவா லாரன்ஸ் முதன்முறையாக கூறியுள்ளார்.


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 7 நாட்களாக சென்னை மெரினாவில் மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும், தமிழ் மக்களும் குடும்பம் குடும்பமாகப் போராடி வந்தார்கள். அந்த போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது, ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி கிடைத்துள்ளது. இதனால் இன்று காலை முதல் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் சென்னை, மெரினாவில் தொடர்ந்து மாணவர்கள் கடலில் இறங்கி போராடி வருகின்றனர்.


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களுடன் போராடி வந்த லாரன்ஸ் போராட்டக்காரர்கள் மத்தியில் பேசியதாவது... ‛‛ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டுள்ளதாக சட்டசபையில் கவர்னர் பேசியுள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நாம் பெற்ற வெற்றியை கொண்டாடும் நேரமிது . இந்த போராட்டத்தில் மாணவர்கள் மட்டுமே பேச வேண்டும். அரசின் நடவடிக்கையை அலங்காநல்லூர் மக்கள் ஏற்று கொண்டுள்ளனர். நாமும் இதனை ஏற்று கொள்ள வேண்டும். எனவே போராட்டக்காரர்கள் கலைந்து செல்லுங்கள். இவ்வாறு மெரினாவில் கூடியிருந்தவர்கள் மத்தியில் ராகவா லாரன்ஸ் பேசினார். ஆனால் லாரன்ஸின் பேச்சை போராட்டாக்காரர்கள் கேட்க மறுத்துவிட்டனர்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாரன்ஸ்... ‛‛ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதே மக்களின் எண்ணம், பாரம்பரிய ஜல்லிக்கட்டை மீட்க வேண்டும் என்பதற்காகவே உதவினேன். என்னுடன் சேர்ந்து பலரும் உணவு வழங்கினார்கள், மாணவர்கள் போராட்டம் நடத்திய வரை ஜல்லிக்கட்டு தான் ஒரே குறிக்கோளாக இருந்தது. ஆனால் இப்போது வேறு சில விஷயங்களை திணிக்கிறார்கள், போராட்ட களத்தில் வேறு வேறு அமைப்புகள் உள்ளே வந்துள்ளது. கோரிக்கைகள் திசைமாறி போனதால் அதிர்ச்சியானேன்'' என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in