டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மாணவர்கள் நடத்தியவரை போராட்டம் அமைதியாக இருந்தது. ஆனால், இப்போது வேறு வேறு அமைப்புகள் உள்ளே வந்துள்ளது என்று ராகவா லாரன்ஸ் முதன்முறையாக கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 7 நாட்களாக சென்னை மெரினாவில் மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும், தமிழ் மக்களும் குடும்பம் குடும்பமாகப் போராடி வந்தார்கள். அந்த போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது, ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி கிடைத்துள்ளது. இதனால் இன்று காலை முதல் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் சென்னை, மெரினாவில் தொடர்ந்து மாணவர்கள் கடலில் இறங்கி போராடி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களுடன் போராடி வந்த லாரன்ஸ் போராட்டக்காரர்கள் மத்தியில் பேசியதாவது... ‛‛ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டுள்ளதாக சட்டசபையில் கவர்னர் பேசியுள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நாம் பெற்ற வெற்றியை கொண்டாடும் நேரமிது . இந்த போராட்டத்தில் மாணவர்கள் மட்டுமே பேச வேண்டும். அரசின் நடவடிக்கையை அலங்காநல்லூர் மக்கள் ஏற்று கொண்டுள்ளனர். நாமும் இதனை ஏற்று கொள்ள வேண்டும். எனவே போராட்டக்காரர்கள் கலைந்து செல்லுங்கள். இவ்வாறு மெரினாவில் கூடியிருந்தவர்கள் மத்தியில் ராகவா லாரன்ஸ் பேசினார். ஆனால் லாரன்ஸின் பேச்சை போராட்டாக்காரர்கள் கேட்க மறுத்துவிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாரன்ஸ்... ‛‛ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதே மக்களின் எண்ணம், பாரம்பரிய ஜல்லிக்கட்டை மீட்க வேண்டும் என்பதற்காகவே உதவினேன். என்னுடன் சேர்ந்து பலரும் உணவு வழங்கினார்கள், மாணவர்கள் போராட்டம் நடத்திய வரை ஜல்லிக்கட்டு தான் ஒரே குறிக்கோளாக இருந்தது. ஆனால் இப்போது வேறு சில விஷயங்களை திணிக்கிறார்கள், போராட்ட களத்தில் வேறு வேறு அமைப்புகள் உள்ளே வந்துள்ளது. கோரிக்கைகள் திசைமாறி போனதால் அதிர்ச்சியானேன்'' என்றார்.