டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை எழுதியவர் கவிஞர் பிறைசூடன். இவரது மகன் கவின் சிவா, மெய்மறந்தேன், ஜெயிக்கிற குதிரை ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதில், ஜெயிக்கிற குதிரை படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்க ஜீவன் நாயகனாக நடித்து வருகிறார். தற்போது இந்த இரண்டு படங்களும் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றன.
இந்த படங்கள் குறித்து கவின் சிவா கூறுகையில், மெய்மறந்தேன் படத்தில்தான் நான் இசையமைப்பாளராக அறிமுகமானேன். அந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. அதையடுத்து ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள ஜெயிக்கிற குதிரை படத்திற்கு தற்போது இசையமைத்துக்கொண்டிருக்கிறேன். இந்த படத்தில் மெலோடி, செண்டிமென்ட், குத்துப்பாட்டு என அனைத்து விதமான பாடல்க ளுக்கு இசையமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. குறிப்பாக இந்த படத்தில் அம்மா இறந்து விடும் சூழலில் ஒரு செண்டிமென்ட் பாடல் இடம்பெற்றுள்ளது.
அந்த பாடலின் சூழலைக்கேட்டதும், சோலை பசுங்கிளியே -என்ற இசைஞானியின் அற்புதமான பாடல்தான் என் மனதிற்குள் ஒலித்தது. அந்த பாடலுக்கு எனது பாணியில் உருக்கமாக இசையமைத்துள்ளேன். அதற்கு எனது தந்தையான கவிஞர் பிறைசூடனே பாடல் எழுதியிருக்கிறார். வீட்டுக்கொரு சாமி உண்டு அம்மா அம்மாதான், கோயில் குளம் போறதெல்லாம் சும்மா சும்மாதான் -என்று தொடங்கும் அந்த பாடல் அனைவருக்குமே பிடிக்கும். அற்புதமான வரிகளாக அமைந்துள்ளன. அதனால் இந்த படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர் களையும் எனது பாடல்கள் போய் சேர்ந்து என்னை பிரபலப்படுத்தும் என்று எதிர்பார்த்திருக்கிறேன் என்கிறார் இசையமைப்பாளர் கவின்சிவா.