'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராகி பின்னர் சினிமாவுக்கு வந்தவர் இமான் அண்ணாச்சி. தற்போது காமெடியன், குணசித்ர நடிகன் என பல தரப்பட்ட கேரக்டர்களில் நடித்து வருகிறார். ஒரு படத்தில் கதையின் நாயகனாக நடிக்கவும் தயாராகிக்கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது அவர் கைவசம் பத்து படங்களுக்கு மேல் இருப்பதாக சொல்கிறார். இருப்பினும், சின் னத்திரையில் குட்டி சுட்டீஸ், சொல்லுங்கண்ணே சொல்லுங்க போன்ற நிகழ்ச்சிகளை எப்போதும் போலவே கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், நான் இப்போது சினிமாவில் பிசியாக இருக்கிறேன். என்றாலும், சின்னத்திரைக்கும் நேரம் ஒதுக்கி அந்த நிகழ்ச்சிகளில் ஆரம்பத்தில் இருந்த அதே ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகிறேன். காரணம், எனக்கு முதல் அடையாளமே சின்னத்திரைதான். அதில் பிரபலமாகிதான் சினிமாவுக்கு வந்தேன். அதோடு, குட்டீஸ் நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் உரையாடுவது மிகப்பெரிய சந்தோசத்தைக் கொடுக்கிறது. அவர்களின் கள்ளம் கபடமற்ற பேச்சைக் கேட்பது ஆனந்தமாக உள்ளது. அவர்களுடன் நானும் மழலையாகி விடுகிறேன்.
அதேபோல் சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்ற நிகழ்ச்சியில் நிறைய மக்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. சினிமா நடிகனாக மட்டுமே இருந்தால் பொதுமக்களை சந்திக்க முடியாது. ஆனால் இந்த நிகழ்ச்சி மூலம் பலதரப்பட்ட மக்களை சந்திக்கிறேன். அதுவும் நல்லதொரு அனுபவமாக உள்ளது. அதனால் நான் என்னதான் சினிமாவில் பிசியானாலும், சின்னத்திரையில் வழங்கும் நிகழ்ச்சிகளை விடவே மாட்டேன். தொடர்ந்து சினிமா, சின் னத்திரை என்று பயணித்துக்கொண்டேயிருப்பேன் என்கிறார் இமான் அண்ணாச்சி.