ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பீட்டா அமைப்பு, என்னை கவுரவப்படுத்தியதை அவமானமாக கருதுகிறேன்; அந்த அமைப்பில், நான் உறுப்பினராக இல்லை என, நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, டுவிட்டரில் அவர் விடுத்த அறிக்கை: மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன், சிந்து சமவெளி நாகரிகத்தில், காளையும், மனிதனும் இணைந்தே உழைத்ததை உணர்ந்து தான், இந்திய அரசு முத்திரையில், காளையை இடம் பெற செய்தனர். மாடு போல, மாட்டுக்காகவும் உழைப்பவன் தமிழன். ஜல்லிக்கட்டுக்கு தடை என்பது, ஒரு இனத்தின் அடையாளத்தை, பண்பாட்டை அழிக்கும் செயல். உலகம் முழுவதும் வாழும், 12 கோடி தமிழர்களின் உணர்வை மதித்து, ஜல்லிக்கட்டு நடத்த, பிரதமர் அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும். சுதந்திர போராட்டத்தை படித்த நான், முதல் முறையாக, இளைஞர்களின் வீரம் மிக்க போராட்டத்தை பார்க்கிறேன்.
தமிழக மக்கள் என்ற ஒரே உணர்வோடு, மிக கண்ணியமாகவும், கட்டுப்பாட்டோடும் மாணவர்கள் நடத்தும் அறப்போராட்டத்தை பார்ந்து வியந்து, தலை வணங்குகிறேன். பீட்டா அமைப்பு, நான் சைவ உணவு சாப்பிடுகிறவன் என்ற முறையில், என்னை சிறப்பித்தது. இப்போது, அதை பெரும் அவமானமாக கருதுகிறேன்; அதற்காக மிகவும் வருந்துகிறேன். நானோ, என் குடும்பத்தினரோ, பீட்டா அமைப்பில் உறுப்பினராக இல்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.