பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான கைதி நம்பர் 150 திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்து வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. தமிழில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி திரைப்படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் கைதி நம்பர் 150 திரைப்படமாக உருவானது. இயக்குனர் விவி விநாயக் இயக்கத்தில் உருவான கைதி நம்பர் 150 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சிரஞ்சீவியுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கலந்து கொண்டார். விழாவில் பேசிய சிரஞ்சீவி, இப்படத்தில் அமிதாப் பச்சனை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க தான் ஆசைப்பட்டதாகவும் ஆனால் அவருக்கேற்ற வகையில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் கைதி நம்பர் 150 படத்தில் இல்லாததால் அமிதாப்பை நடிக்க வைக்க முடியாமல் போனதாக சிரஞ்சீவி கூறினார். சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்த இப்படம் சிரஞ்சீவியின் மகன் ராம் சரணின் தயாரிப்பில் உருவான முதல் திரைப்படம் ஆகும்.