ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
சி3 படத்தை விளம்பரப்படுத்தவே நடிகர் சூர்யா, ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராடுகிறார் என்று பீட்டா கூறிய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீட்டாவிற்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் சூர்யா.
நடிகர் சூர்யா தொடர்ந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை ஆதரித்து வருகிறார். ஆனால் பீட்டா அமைப்பின் நிர்வாகி நிகுஞ்ச் சர்மா என்பவர், பட விளம்பரத்துக்காகவே ஜல்லிக்கட்டை சூர்யா ஆதரிப்பதாக பேசினார். இது சூர்யா ரசிகர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் பீட்டாவிற்கு எதிராக கடும் கண்டனங்களை சூர்யா ரசிகர்கள் தெரிவித்தனர்.
அதோடு இந்த சம்பவம் சூர்யாவையும், சூர்யா குடும்பத்தையும் மிகவும் வருத்தமடைய செய்திருக்கிறது. அதனால் ஜல்லிக்கட்டுக்காக தன் சி3 புரொமோஷனையும் தள்ளி வைத்தார் சூர்யா. இந்நிலையில், தவறான செய்தியை பரப்பி வரும் பீட்டா அமைப்பை மன்னிப்பு கோரும்படியும், அவர்கள் பரப்பிய செய்தி தவறானது என்பதை தெரிவிக்கும் வகையில் பிரஸ் ரிலீஸ் ஒன்றை 7 நாட்களுக்குள் வெளியிடும்படியும் கூறி நடிகர் சூர்யா சார்பில் அவரது வக்கில் ஆர்.விஜய் ஆனந்த், பீட்டா அமைப்புக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.