'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நேற்று கதவை மூடிக் கொண்டு, நிழலுக்கு பந்தல் அமைத்துக் கொண்டு, உட்கார மேடை, அதன் மேல் நாற்காலிகள் என சொகுசாக மாணவர்களின் அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவு என்ற பெயரில் நேற்று நடைபெற்ற போராட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் வந்து உடனே சென்றதாகச் சொன்னார்கள். நேற்று காலை வரை எந்த அறிக்கையும் தராத, எங்கேயிருக்கிறார் என்று கூடத் தெரியாத அஜித்தும் கூட்டத்தோடு கூட்டமாக நின்று சென்றார். நடிகர் சங்க போராட்டத்திற்கு வருவதற்கு முன்னர் சூர்யா, மெரீனாவிற்கு சென்று இளைஞர்களுடன் இளைஞராக வந்து அமர்ந்து போராடினார்.
நடிகர் என்ற அடையாளத்துடன் அங்கு யாரும் வரக் கூடாது, எங்களில் ஒருவராகத்தான் வர வேண்டும் என போராட்டத்தில் உள்ள இளைஞர்கள் போராட்டம் ஆரம்பித்த நாளிலிருந்தே உறுதியுடன் இருக்கிறார்கள். ராகவா லாரன்ஸ், ஜி.வி.பிரகாஷ், ஆர்.ஜே.பாலாஜி, ஹிப் ஹாப் தமிழா ஆகியோர் அப்படித்தான் போராடும் இளைஞர்களுக்கு பக்கபலமாக இருந்து உதவிகளைச் செய்து வருகிறார்கள்.
நடிகர் சங்கப் போராட்டக் களத்திற்கு விஜய் நேற்று செல்லவில்லை. நேற்று இரவு அவர் மெரீனா கடற்கரைக்கு முகத்தை துணியால் மூடிக் கொண்டு சென்று, போராடும் இளைஞர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். முகத்தை மறைத்துக் கொண்டு சென்றிருக்க வேண்டாம் என சிலர் சொன்னாலும் நடிகர் சங்க போராட்டத்தை புறக்கணித்து போராட்டக் களமான மெரீனாவிற்கே விஜய் சென்று அவர்களுடன் ஒருவராக இருந்ததற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தற்போது பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.