பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழில் குசேலன், புலிவேசம் படங்களை அடுத்து தற்போது சிவலிங்கா படத்தை இயக்கியுள்ளார் பி.வாசு. ரஜினி நடித்த சந்திரமுகி படத்தில் இரண்டாம் பாகமான இந்த படத்தில் லாரன்ஸ், ரித்திகா சிங், வடிவேலு, ராதாரவி, பானுப்பிரியா, ஊர்வசி, சக்தி என ஒரு பெரிய பட்டாளமே நடித்துள்ளனர். ரிலீசுக்கு தயாராகி விட்ட இந்த படத்தை அடுத்து தெலுங்கில் ஒரு படம் இயக்குகிறாராம் பி.வாசு.
இதற்கு முன்பு தெலுங்கில் பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் போன்ற முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கியுள்ள பி.வாசு, தற்போது தெலுங்கு சினிமாவில் இன்னொரு முன்னணி நடிகரான ஜகபதிபாபுவை வைத்து இயக்கப்போவதாக கூறப்படுகிறது. அதோடு, அந்த படத்தில் ஹீரோ -வில்லன் என அவர் இரண்டுவிதமான வேடங்களில் நடிக்கிறாராம். அவருக்கான கதையை ரெடி பண்ணி விட்ட பி.வாசு. சிவலிங்கா திரைக்கு வந்த பிறகு அந்த படம் குறித்து வேலைகளில் இறங்குவார் என்கிறார்கள்.