ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் 4 நாட்களுக்காக போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த நடிகர் லாரன்ஸ் திடீரென மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஜல்லிக்கட்டு நடத்த கோரி மெரினா கடற்கரையில் 4 நாட்களாக லட்சக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், பெண்களும் அதிகளவில் கலந்துகொண்டுள்ளனர். நடிகர் லாரன்ஸ் போராட்டத்தின் முதல் நாளே மெரினாவிற்கு வந்து ஆதரவு தெரிவித்தார்.
போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்களுக்காக உணவு, குடிநீர் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். மேலும், டாய்லெட் வசதி உள்ள 5 கேரவன்களை மெரினாவிற்கு கொண்டு வர உதவி செய்தார். இது, போராட்டத்தில் உள்ள பெண்களுக்கு பெரும் உதவியாக உள்ளது.
நடிகர் லாரன்சுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் கழுத்தில் பேன்ட் அணிந்து தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிலையில், 4 வது நாளான இன்று காலை 11.30 மணியளவில் திடீரென லாரன்ஸ் மயங்கி விழுந்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.