தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜல்லிக்கட்டு விவகாரம் தமிழகத்தில் எழுச்சி போராட்டமாக மாறியுள்ளது. ஒட்டுமொத்த தமிழர்களின் குரல் முழுக்க உரக்க கேட்டு கொண்டிருக்கிறது. மாணவர்களின் போராட்டாத்திற்கு ஆதரவாக நடிகர் சங்கம் போராட்டம் நடத்தியது. ஆனால் இதற்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இன்று நடந்த நடிகர் சங்க போராட்டத்தில் விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் பங்கேற்கவில்லை. நடிகர் விமலும் இன்றைய நடிகர் சங்க போராட்டத்தில் பங்கேற்கவில்லை. மாறாக திருச்சி மணப்பாறை அருகே நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றார்.
இதுப்பற்றி செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விமல், ஜல்லிக்கட்டு நடைபெறாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர்கள் நடத்தும் போரட்ட களத்தை விட, மண்ணில் நடந்த போராட்டத்தில் நானும் பங்கேற்று போரடியது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று கூறினார்.