'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், ஹரி இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள படம் 'சிங்கம்-3'. எஸ்-3 என்ற பெயரில் தொடங்கப்பட்ட இப்படத்துக்கு தணிக்கையில் யுஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டதால் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டது. அங்கே எந்த கெடுபிடியும் செய்யாமல் யு சான்றிதழ் வழங்கினர். யு சான்றிதழ் கிடைத்ததால் வரிவிலக்கு நிச்சயம் கிடைக்கும். அதற்கு எஸ் 3 என்ற ஆங்கிலப்பெயர் தடையாக இருந்தது. எனவே சில தினங்களுக்கு முன் 'சி-3' என்று மாற்றப்பட்டது.
சி -3 படம் வருகிற 26-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. பைரவா படத்தைப்போலவே அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாகவிருக்கும் இந்தப்படம் தமிழகத்தில் வெளியாகும் அன்றே கேரளாவிலும் வெளியாகிறது. இதற்கு முன் சூர்யா நடிப்பில் வெளியான 'சிங்கம்', 'சிங்கம்-2' ஆகிய படங்கள் கேரளாவிலும் வெளியாகி நல்ல வசூலை குவித்துள்ளது. இதனால் கேரள ரசிகர்கள் மத்தியில் 'சி-3' படத்துக்கு எதிர்பார்ப்பு பல மடங்காக இருந்து வருகிறது. இதை கருத்தில் கொண்ட சூர்யா 'சி3' பட புரொமோஷனுக்காக, இயக்குனர் ஹரியுடன் இணைந்து கேரளாவில் உள்ள திருச்சூரில் தன்னுடைய ரசிகர்களை சந்தித்தார். தொடர்ந்து திருவனந்தபுரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தும் சி3 படத்துக்கு புரமோஷன் செய்தார்.
இத்தனை செய்தும் ஜனவரி 26 அன்று படத்தை வெளியிடலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருக்கிறாராம் சூர்யா. மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள இந்த நேரத்தில் படத்தை வெளியிட வேண்டாம் என்கிறாராம். ஆனால் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா ஜனவரி 26 அன்று படத்தை வெளியிட்டே தீர வேண்டும் என்று உறுதியாக இருக்கிறாராம். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று...?