'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழகத்தில் நடந்து வரும் போராட்டாத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ஆரம்பத்திலேயே தனது முழு ஆதரவை தெரிவித்து வருவதோடு சென்னை மெரினா கடற்கரையில் அலைகடல் என திரண்டிருக்கும் போராட்டாக்காரர்களுக்கு நேரடியாக சென்று தேவையான உதவிகளையும் செய்து வருகிறார். இதுதொடர்பாக எவ்வளவு செலவானாலும் சரி, ஒரு கோடியானாலும் நானே தருகிறேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் போராட்ட களத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் களத்தில் இறங்கி போராடி வருகின்றனர். அவர்களுக்கு இயற்கை உபாதைகள் கழிக்க சிரமமாக இருப்பதால் டாய்லெட்டு உள்ள 5 கேரவன்களை ராகவா லாரன்ஸ் நடித்து வரும் சிவலிங்கா படத்தின் தயாரிப்பாளர் கொண்டு வந்தார். லாரன்ஸின் வேண்டுகோளுக்கு இணங்க இதை அனுப்பி வைத்ததாக சிவலிங்கா படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.
மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறேன், போராட்டம் செய்கிறேன்... என்று மாணவர்களின் கிரெடிட்டை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் திரையுலகினர் மத்தியில் இளைஞர்களோடு சேர்ந்து தானும் இதுபோன்று களத்தில் களமிறங்கி வேலை செய்யும் ராகவா லாரன்ஸை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.