ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பட்டத்து யானை படத்தில் நாயகியாக அறிமுகமான ஐஸ்வர்யா அர்ஜூன், தற்போது தந்தை அர்ஜூனின் இயக்கத்தில் காதலின் பொன்வீதியில் படத்தில் நடித்து வருகிறார். தான் ஒரு ஆக்சன் நடிகராக இருந்தபோதும் இந்த படத்தை பியூர் லவ் சப்ஜெக்ட்டில் இயக்கி வருகிறார் அர்ஜூன். அதோடு இந்த படத்தை தனது மகள் ஐஸ்வர்யாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் இயக்கி வருவதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் அதுகுறித்து ஐஸ்வர்யா அர்ஜூனைக்கேட்டால், காதலின் பொன்வீதியில் படம் காதல் கதையில் உருவாகியுள்ளது. அந்த வகையில், நாயகனாக நடிக்கும் சாந்தனுக்கும், எனக்கும் ஒரே அளவிலான வேடங்கள்தான். இந்த படத்தில் நான் நிருபராக நடிக்கிறேன். காதலினால் ஏற்படும் பிரச்சினையை ஹீரோ ஹீரோயின் இருவருமே எதிர்கொள்கிறோம். அதோடு, இந்த படத்தில் முதலில் அப்பா முன்பு ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க ஓரளவு தயக்கம் இருந்தது. ஆனால் அது பின்னர் மறைந்து விட்டது.
காரணம், என் தந்தை அர்ஜூன் படப்பிடிப்பு தளத்தில் எனக்கு அப்பாவாக இல்லாமல் டைரக்டராக செயல்பட்டார். அதனால் என்னிடமிருந்த தயக்கமானது பின்னர் மாறி விட்டது. அதையடுத்து ரொமான்ஸ் காட்சிகளில் சாந்தனுடன் இயல்பாக நடித்தேன். மேலும், என் தாத்தா முதல் அப்பா, அம்மா என பேமிலியில் பலரும் நடிகர்களாக இருப்பதால் படப்பிடிப்பு சூழல் எனக்கு புதுசாக தெரியவில்லை. பழக்கப்பட்ட விசயமாகவே இருந்தது என்கிறார் ஐஸ்வர்யா அர்ஜூன்.