ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் வெளியான அச்சமின்றி படம் ரசிகர்களிடம் பெற்ற ஆதரவு காரணமாக தற்போது மிகுந்த உற்சாகத்தில் காணப்படுகிறார் விஜய் வசந்த். அதோடு, இனிமேல் நடிக்கிற ஒவ்வொரு படமும் ரசிகர்களின் ஆதரவு பெறக்கூடிய கதைகளாக இருக்க வேண்டும் என்பதிலும் தற்போது உறுதியாகி விட்டார்.
அதுபற்றி விஜய் வசந்த் கூறும்போது, ரசிகர்களின் ரசனைக்கு தீனி போடக்கூடிய படங்களை கொடுத்தால் அவர்கள் எப்போதுமே வரவேற்பார்கள். அதனால்தான் அச்சமின்றி படத்திற்கு பிறகு கதை விசயத்தில் ரொம்ப கவனமாகி விட்டேன். அதோடு இப்போது எந்தமாதிரியான கதைகளிலும் என்னால் பயணிக்க முடியும் என்கிற நம்பிக்கையும் அதிகரித்துள்ளது. அதனால் அடுத்தபடியாக ஓரளவு ஆக்சன் கலந்த கதையில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன்.
இந்நிலையில், தற்போது நான் நடித்து வரும் மைடியர் லிசா ஹாரர் படமும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. சமீபகாலமாக பேய் படங்கள் என்றாலே காமெடி படங்களாகி விட்டது. பேயைக்கண்டு பயந்த காலம் போய் இப்போது பேயை காமெடி பொருளாக்கி விட்டனர். ஆனால் நான் நடிக்கும் மைடியர் லிசா படம் மிரட்டலான பேய் படம். இதுதான் உண்மையான பேய் படம் என்று சொல்லும் அளவுக்கு இந்த படத்தின் கதை அமைந்துள்ளது. மேலும், முன்பு வெளியான மைடியர் லிசா என்ற படத்தின் டைட்டீலாக இருந்தபோதும் இந்த படத்தின் கதைக்கும் முந்தைய படத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இது முற்றிலும் புதிய கதையில் உருவாகிக்கொண்டிருக்கிறது என்கிறார் விஜய் வசந்த்.