மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கம் இன்று மவுன போராட்டம் நடத்தியது. இதில் அஜித், சூர்யா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர் . தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என்று தமிழர்கள் அனைவரும் களத்தில் குதித்துவிட்டனர். குறிப்பாக, மாணவர்களின் எழுச்சி போராட்டம் தமிழகத்தை உலகளவில் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக திரையுலகினரும் களத்தில் இறங்கியுள்ளனர். நேற்று திரையுலக கூட்டமைப்பு திரைப்பட வர்த்தகசபை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று தென்னிந்திய நடிகர் சங்கம் மவுன போராட்டம் நடத்தியது
சென்னை, தி.நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இந்த போராட்டம் நடந்தது. மவுன போராட்டமாக நடந்து வரும் இந்த போராட்டத்தில் தலைவர் நாசர், துணை தலைவர் பொன்வண்ணன் ஆகியோருடன் ரஜினி, கமல், அஜித், ஷாலினி அஜித், நாசர், சூர்யா, சிவக்குமார், ரகுமான், ஐசரி கணேஷ், சத்யராஜ், மோகன், பாக்யராஜ், பூர்ணிமா, அர்ச்சனா, சிவகார்த்திகேயன், பிசி.ஸ்ரீராம், த்ரிஷா, மன்சூரலிகான், விஷ்ணு விஷால், பார்த்திபன், ரூபா மஞ்சரி, விக்ரம் பிரபு, பொன்வண்ணன், சிபிராஜ், சாந்தனு, கோவை சரளா, விஜயலட்சுமி, பிரசன்னா, நந்தா, செந்தில், ஆர்யா, விக்ரம், கலையரசன், தியாகராஜன், வடிவேல், ஸ்ரீகாந்த், சிம்ரன், பசுபதி, வரலட்சுமி, சந்தானம், தனுஷ், சங்கீதா, விஜய் ஆண்டனி மற்றும் நடிகர் சங்க பொதுக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். மாலை 5 மணி வரை போராட்டம் நடக்கிறது. இன்னும் பல நடிகர், நடிகையர் பங்கேற்றனர்.
5 மணிவரை நடந்த போராட்டத்தில் அஜித் காலை முதல் மாலை வரை பங்கேற்றார். கூட்டத்தின் முடிவில் போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி என துணை தலைவர் பொன்வண்ணன் கூறினார்.
இது மாணவர்கள் துவக்கி வைத்த போராட்டம். இதனால், மீடியாக்களின் கவனம் நடிகர்களின் உண்ணாவிரதம் நோக்கி திரும்பும். இது மாணவர்களின் போராட்ட உணர்வை சிதைக்கும் என்று பரவலான விமர்சனம் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, மாணவர்களின் உழைப்பை திருடாதீர்கள் என்று நடிகர் சங்கத்திற்கு போராட்டாக்காரர்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்த நிலையில் எங்கள் உண்ணாவிரத்தை ஒளிபரப்ப வேண்டாம் என்று தென்னிந்திய நடிகர் சங்கம், டி.வி.சேனல்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனால் மீடியாக்கள் யாரும் நடிகர் சங்கத்தை முன்னிலைப்படுத்தவில்லை.