தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள் போராட்டம் புதிய உத்வேகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று மௌனப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்.
இந்தப் போராட்டத்தில் நடிகர் சங்க செயலாளர் விஷால் கலந்து கொள்ளவில்லை. அவர் டில்லியில் பிரதமரைப் பார்ப்பதற்காக்க் காத்துக் கொண்டிருக்கிறார். இளைஞர்கள் ஒரு பக்கம் போராடிக் கொண்டிருக்க, நடிகர் சங்கம் நடத்தும் போராட்டத்திற்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். வேண்டுமென்றால் எங்களுடன் மெரினாவிற்கு வந்து போராடுங்கள் என எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகிறார்கள்.
ஆந்திர அரசியல் வழித் தொடர்பு மூலமாக பிரதமரை சந்திக்க விஷால் முயற்சித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் நேற்று நடத்திய போராட்டத்திலும் விஷாலின் இந்த தனி ரூட்டிற்கு கடும் எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது.
டில்லியில் நேற்று ஆங்கில செய்தி சேனல்களுக்கும் விஷால் பேட்டிகள் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பிரதமரைச் சந்தித்த பின்தான் சென்னை திரும்புவாரா, அல்லது பிரதமைரை சந்திக்காமலே திரும்புவாரா என்பது இனிதான் தெரிய வரும்.