டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி இன்று தென்னிந்திய நடிகர் சங்கம் மவுன உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது. இதில் ரஜினி, கமல், அஜித், விஜய், நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. இதனால், மீடியாக்களின் கவனம் நடிகர்களின் உண்ணாவிரதம் நோக்கி திரும்பும். இது மாணவர்களின் போராட்ட உணர்வை சிதைக்கும் என்று பரவலான விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலையில் எங்கள் உண்ணாவிரத்தை ஒளிபரப்ப வேண்டாம் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் டி.சி.சேனல்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
இன்று தமிழக எல்லைக்குள் மட்டுமல்ல உலகம் முழுவதும் பரவிகிடக்கும் மக்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பில் மூழ்கி இருக்கிறார்கள். முதுபெரும் தமிழ்க்குடியின் ஒரு கலாச்சார சின்னம் முடக்கப்பட்டுக்கிடக்கிறது. அதை மீட்டுக் கொண்டு வர தன்னிச்சையாய் தன்னார்வத்தோடு அலைகடலென மாணவர் சமுதாயமும், இளைஞர்களும் ஒன்று சேர்ந்து போராடுகின்றனர். அவ்வெழுச்சியினால் ஈர்க்கப்பட்டு பெண்களும், குழந்தைகளுமாய் வீதி இறங்கி பங்குபெறுகின்றனர்.
இம்மாபெரும் போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் முழுமையான ஆதரவைத் தருகிறது. வெறும் பேச்சுக்களால் அல்லாமல் மவுனத்தை மொழியாய் கொண்டு “மவுன அறவழி அமர்வை” நடத்துகிறது. நடிகர் சமூகம் மட்டுமின்றி பல்வேறு துறை சார்ந்தோரும் கலந்து கொண்டு ஆதரவை வெளிபடுத்த போகின்றனர். யாரும் கருத்துகளை , ஆலோசனைகளை வெளிபடுத்த போவதில்லை. அதனால் எங்களது இந்த நிகழ்வை டி.வி மற்றும் இணையதள நண்பர்கள் வீடியோ கவரேஜ் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்
அதற்கு பதிலாக, உண்மையில் இப்போராட்டத்தின் காரணகர்த்தாக்கள் வெட்டவெயிலிலும் பனியிலும் , பசியிலும் சிதறாமல் கூடியிருக்கும் அம்மாணவர்கள் , பல்துறை சார்ந்த இளைஞர்கள் அவர்கள் தான் மக்களால் அறியப்பட வேண்டியவர்கள் , அவர்கள் கருத்துகள் தான் கேட்கப்பட வேண்டியவை. ஆகவே ஊடக நண்பர்களே அங்கு நடப்பவைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். இன்றைய சூழலில் யாரை முன்னிறுத்த வேண்டுமோ அவர்களை முன்னிறுத்துவோம். இது நம்கடமை என்ற வேண்டுகோளை உங்கள் முன் வைக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.