பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரஹ்மான் நாளை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டம் நாளை கடையடைப்பு, லாரிகள், பேருந்துகள், கார்கள், ஆட்டோக்கள் ஓடாது என வேறு ஒரு தளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழின உணர்வுள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தப் போராட்டத்தை இந்தியா மட்டுமல்லாது உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திரையுலகினரும் பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இசைப்புயல் ரஹ்மானும் ஜல்லிக்கட்டுக்காக நாளை களம் இறங்க உள்ளார்.
இதுதொடர்பாக ரஹ்மான் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... ‛‛ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நாளை நான் உண்ணாவிரதம் இருக்க உள்ளேன் என்று கூறியுள்ளார்.
இதுபோன்று ஒரு பேராட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் ஈடுபடுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.