டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தமிழகத்தில் அதிதீவிரம் அடைந்துள்ளது. மாணவர்கள் தொடர்ச்சியாக மாநிலம் முழுக்க போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இந்த விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஆதரவு குரல் கொடுத்து வரும் சிம்பு நேற்று தன் வீட்டு முன்ன போராட்டத்தில் ஈடுபட்டார். இரவில் தனது வீட்டு வெளியே ரோட்டில் உறங்கினார். அவருடன் நூற்றுக்கணக்கான ரசிகர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனது ஆதரவாளர்களிடம் சிம்பு பேசுகையில்... ‛‛ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க சென்னைக்கு ராணுவம் வந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. போராட்டக்காரர்கள் மீது கை வத்தால் அது மிகப்பெரிய பாவம். அவர்களை காக்க வேண்டியது நம் கடமை. எனவே நாம் செய்ய வேண்டியதெல்லாம் போராட்ட களத்தில் இருப்பவர்களுக்கு உடனடியாக தேசிய கொடியை அளிக்க வேண்டும். தேசிய கொடியை மேலே போர்த்தி கொண்டால் எப்படி அவர்கள் அடிப்பார்கள், ராணுவே வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. எங்களது போராட்டம் தொடரும்'' என்று கூறியுள்ளார்.