தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கும் வரை நமது போராட்டத்தை நிறுத்தக்கூடாது என, திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்களிடையே நடிகர் விஜய்சேதுபதி பேசினார்.
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க கோரி திண்டுக்கல்லில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் பகுதியில் கருப்பன் பட சூட்டிங்கில் இருந்த நடிகர் விஜய் சேதுபதியும் மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றார்.
அவர் பேசியதாவது: தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டாக சங்ககாலத்திலேயே அடையாளம் காட்டப்பட்டது ஜல்லிக்கட்டு. இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமங்களில் பொங்கல் விழா களை கட்டவில்லை. இந்த தடை ஒரு இனத்திற்கே செய்யும் துரோகமாகும். தற்போது மாணவர்கள் ஒன்றிணைந்து பாரம்பரியத்தை காக்க போராடுவது பாராட்டுக்குரியது. ஜல்லிக்கட்டுக்கு உள்ள தடையை நீக்கும்வரை நமது போராட்டம் ஓயக்கூடாது. உங்கள் போராட்டத்திற்கு நான் எப்போதும் துணை இருப்பேன், என்றார்.
செல்பியால் தள்ளுமுள்ளு: நடிகர் விஜய் சேதுபதி கூட்டத்திற்கு வந்தவுடன் கூச்சல், குழப்பத்துடன், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. அவர், 30 நிமிடங்களாவது பேச வேண்டும் என்று வந்தார். கூச்சல், தள்ளுமுள்ளுவாலும், அவருடன் செல்பி எடுக்க சிலர் முற்பட்டபோது அவர் நெருக்கடியில் சிக்கியதாலும் ஐந்தே நிமிடங்களில் பேச்சை முடித்து வெளியேறினார்.