ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ்த் திரையுலகத்தில் எத்தனையோ சர்ச்சைகளைக் கடந்து வந்தாலும் தனக்கென இன்னும் தனி ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்கள் மட்டுமே குரல் கொடுத்து வரும் நிலையில் தன்னுடைய ஆதரவுக் குரலை இன்று வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடைய அறிக்கை யாரோ எழுதிக் கொடுத்ததோ அல்லது அவரால் சொல்லப்பட்டதோ எப்படியிருந்தாலும் அதில் இருந்த விஷயங்கள் போராடும் மக்களுக்கு மேலும் உத்வேகத்தைக் கொடுக்கும்.
“பிறப்பால் இல்லா விட்டாலும், உணர்வாலும் உள்ளத்தாலும் நானும் இந்த மாநிலத்தை சேர்ந்தவள் என்னும் பெருமை என்னை தலை நிமிர வைக்கிறது”, என்ற வரிகள் தமிழ்நாட்டில் தமிழ் ரசிகர்களிடம் இருந்து பணம் சம்பாதிக்கும் மற்ற மொழி, நடிகர்கள், நடிகைகளுக்கு ஒரு சாட்டையடியாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.
தமிழ்த் திரையுலகத்தில் மற்ற மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் ரசிகர்களால் உச்சத்தில் வைத்து போற்றப்பட்டார்கள், போற்றப்பட்டு வருகிறார்கள். மற்ற முன்னணி நடிகைகள் யாரும் இப்படி ஒரு போராட்டம் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்று கூடத் தெரியாமல் தங்களது வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிலரது டிவிட்டர் பக்கங்களுக்குப் போனால், “ஜிம்மிலிருந்து வந்தேன், நேற்று எடுத்த புகைப்படம், ஷுட்டிங்கில் இருக்கிறேன்,” என்ற ரீதியிலான பதிவுகளை மட்டுமே போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நயன்தாராவின் இந்தத் துணிவு மற்ற நடிகைகளிடம், ஏன் நடிகர்களிடம் இருந்து வருமா என்று கேட்க வைக்கிறது.