தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜல்லிக்கட்டு விவகாரம் வேறு ஒரு கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இத்தனை நாட்களாக 'பீட்டா' அமைப்புக்கு ஆதரவாக தங்களை காட்டிக் கொண்டவர்களும், 'வாட் இஸ் ஜல்லிக்கட்டு' என்று கேட்டவர்களும் கூட நாங்கள் அப்படியெல்லாம் இருந்ததேயில்லை என பொய் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ரசிகர்களை அவ்வளவு சீக்கிரத்தில் ஏமாற்றி விட முடியாது என்பதை அவர்கள் நேரடியாக உணர்ந்து தங்களது தவறை திருத்திக் கொண்டு வருகிறார்கள்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி, விஷால், ராகவா லாரன்ஸ் என தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர்களும், வியாபார வட்டாரங்களில் தங்களது இருப்பைக் காட்டிக் கொண்டிருப்பவர்களும் வெளிப்படையாகத் தங்களது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டு வருகிறார்கள்.
ஆனாலும், இவ்வளவு நடந்து கொண்டிருந்தாலும் எதுவுமே நடக்காதது போல சிலர் அமைதி காத்து வருகிறார்கள். ஒரு அறிக்கையாவது வெளியிட மாட்டாரா, ஒரு டிவீட்டாவது போட மாட்டாரா, ஆதரவுக் குரலாவது கொடுக்க மாட்டாரா என அஜித்தை நோக்கி பலரது பார்வையும் திரும்பியுள்ளது. தனக்காக காத்துக் கொண்டிருக்கட்டும் என்ற மனநிலைதான் அதில் இருக்கிறதோ என்ற சந்தேகமும் இப்போது பரவலாக எழுந்துள்ளது.
இதனிடையே இன்று காலை நடைபெற்ற 'அட்டு' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர்கள் கில்டைச் சேர்ந்த ஜாக்குவார் தங்கம் 'ஜல்லிக்கட்டு'க்கு ஆதரவு தராத நடிகர், நடிகைகள் வீட்டு முன் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்துள்ளார்.
திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்துக்கு நேரடியாகச் சென்று தங்களது ஆதவைத் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.