நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் வேளையில், இதே கருத்தை வலியுறுத்தி நடிகர் சங்கமும் ஜன., 20-ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு, எந்தவித கட்சி, அமைப்புகளின் பின்னணி இல்லாமல், ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திரையுலகினர் பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விஷயத்தில் நடிகர் சங்கமும் களமிறங்க உள்ளது. 20ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக நடிகர் சங்க துணை தலைவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது... ‛‛ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் சார்பில் நாளை மறுநாள்(ஜன., 20-ம் தேதி) உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. சென்னை, திநகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்திலேயே இது நடைபெறுகிறது. இதில் அனைத்து நடிகர், நடிகைகளும் பங்கேற்பார்கள்'‛ என்றார்.
உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுமா...? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, நடவடிக்கை எதுவும் கிடையாது, இது உணர்வுசார்ந்த போராட்டம், இதில் அனைவரும் பங்கேற்பார்கள் என நம்புகிறோம் என்றார்.