ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜல்லிக்கட்டு தொடர்பாக நடிகர் விஷால், பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். முன்னதாக அவர், பிரதமர் மோடிக்கு பேக்ஸ் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த கடிதம் அனுப்பியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தமிழகம் முழுக்க தீவிரம் அடைந்துள்ளது. மாணவர்கள் களத்தில் இறங்கியுள்ளதால் இந்த விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மதுரை, சென்னை, கோவை உள்ளிட்ட மாநிலம் முழுக்க போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இதனிடையே ஜல்லிக்கட்டு எதிராக விஷால் பேசியதாக சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. ஆனால் விஷால் அதை மறுத்தார், ஜல்லிக்கட்டை நான் எதிர்க்கவில்லை, ஜல்லிக்கட்டு நடத்த நான் உறுதுணையாக இருப்பேன் என்று விஷால் கூறியிருந்தார். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக விஷால் பிரதர் மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது...
‛‛பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு... மிகுந்த வலியுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன். தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரியம். ஆனால் அது மிருக வதை என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. காளை வளர்ப்பவர்கள், அதை தங்களது பிள்ளை போன்று வளர்க்கிறார்கள். நானும் விலங்குகள் நல விரும்பி தான். விலங்குகளுக்கு எதிரான கொடுமைகள் நடக்கும்போது குரல் கொடுத்திருக்கிறேன். ஆனால் ஜல்லிக்கட்டு மிருக வதை கிடையாது. ஜல்லிக்கட்டால் பாரம்பரியம் காக்கப்படுவதுடன் நாட்டு மாடுகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க உதவும்.
ஜல்லிக்கட்ட தடையால் தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் அனைவரும் ஒன்று கூடி குரல் கொடுக்க துவங்கியுள்ளனர். இதனால் ஆங்காங்கே சில தடியடி சம்பவங்களும் நடந்தன. எனவே இந்த நிலைமை சீராக பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் பிரதமர் நீங்கள்(பிரதமர் மோடி). பாரம்பரியத்திற்கும், கலாச்சாரத்திற்கும் எப்போதும் மதிப்பளிப்பவர். எனவே இந்த கடிதத்தை உங்களுக்கு நான் எழுதுகிறேன். ஜல்லிக்கட்டுக்கான தடையை உடனே நீங்கள் நீக்க வேண்டும், அதற்காக சட்ட திருத்தத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் காக்கவும், நாட்டு மாடுகளை காக்கவும் நீங்கள் ஒரு நல்ல முடிவை எடுப்பீர்கள் என்று லட்சக்கணக்கானவர்கள் நம்புகிறார்கள். என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஷால், தமிழக கலாச்சாரமான ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும், நடக்கும். தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களின் குரல் மத்திய அரசுக்கு கேட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்காக மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். சந்திக்கும்போது ஜல்லிக்கட்டுக்காக மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துவேன். பீட்டா அமைப்பில் நான் உறுப்பினராக இல்லை. யாரோ என் படத்தை போட்டு எழுதினால் நம்ப வேண்டாம் என்றார்.
இதனிடையே நடிகர் விஷால் இன்று டில்லி செல்கிறார். ஜல்லிக்கட்டு விஷயமாக நாளை அவர் பிரதமர் மோடியை நேரில் சந்திப்பார் என தெரிகிறது.
இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.