தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நான் தமிழ் மண்ணில் பிறக்காவிட்டாலும், என்னை வாழ வைத்தது தமிழம், ஜல்லிக்கட்டு போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன், நாடெங்கும் ஜல்லிக்கட்டு முழக்கத்தை ஒலிக்கச் செய்வோம் என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுக்க போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் திரைபிரபலங்களும் அதிகளவில் குரல் கொடுக்க துவங்கியுள்ளனர். நடிகர்கள் பலர் குரல் கொடுத்துள்ள நிலையில் நடிகைகளில் ஒருசிலர் தான் குரல் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் நம்பர்-1 நடிகையாக வலம் வரும் நயன்தாராவும் ஜல்லிக்கட்டிற்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து நயன்தாரா கூறியிருப்பதாவது... ஜல்லிக்கட்டு ஆதரவாக இளைஞர்கள் அமைதியாக போராடுவது பெருமைப்பட வைக்கிறது. நான் தமிழகத்தில் பிறக்கவில்லை, இருந்தாலும் எனக்கு அங்கீகாரம் தந்ததும், என்னை வாழ வைத்ததும் தமிழகமும், இந்த மக்களும் தான். இந்த உணர்ச்சிகரமான போராட்டத்தில் அவர்களோடு நான் உறுதுணையாக நிற்பேன் என்பதை உறுதியாக சொல்லி கொள்கிறேன். அவர்களுடன் என்னுடைய குரலும் இணைந்து நம் கலாச்சாரத்துக்கு எதிரான அந்த அந்நிய நாட்டு நிறுவனத்துக்கு நம் பலத்தை காட்டும் என நம்புகிறேன்.
ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் எடுத்து இருக்கும் இந்த உணர்ச்சிகரமான நடவடிக்கை, நிச்சயமாக தமிழக கலாச்சாரத்தின் பெருமையை உலகமெங்கும் ஒலிக்கச் செய்யும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எத்தனை தடைகள் வந்தாலும் அதை தைரியமாக எதிர்கொண்டு, தங்களின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்று தொடர்ந்து இந்த இளைஞர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். ஒரு சராசரி குடிமகளாக நான் அவர்களின் ஒற்றுமைக்கும், தைரியத்திற்கும் தலை வணங்குகின்றேன். இவர்களின் இந்த முயற்சி, தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளமான ஜல்லிக்கட்டை, எந்தவித காலதாமதமும் இன்றி மீண்டும் தமிழகத்தில் நிலை நிறுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. நாடெங்கும் ஜல்லிக்கட்டு முழக்கத்தை ஒலிக்கச் செய்வோம்"
இவ்வாறு நயன்தாரா கூறியுள்ளார்.