‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தமிழ்நாட்டு மக்களும், விவசாயிகளும், தமிழ் இன உணர்வாளர்களும் ஒரு பக்கம் தங்களது கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைக் காப்பாற்ற வேண்டும் என்று கடந்த சில நாட்களாக தீவிரமாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று அந்தப் போராட்டம் அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில் 'ஜல்லிக்கட்டு' விவகாரத்திற்காக ஒரு அறிக்கை மட்டும் விட்டு விட்டு, ஊர் ஊராக தன்னுடைய 'சி 3' படத்தை ஓட வைப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார் சூர்யா.
ஒரு பக்கம் இளைஞர்கள் தங்களது உணர்வு போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்க, மறு பக்கம் சூர்யா 'சி 3' படத்தின் பிரமோஷன் என்ற பெயரில் இளைஞர்களை தன்னைப் பார்க்க கூட்டத்தைக் கூட்டுகிறாரே என நடுநிலையாளர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.
'ஜல்லிக்கட்டு' விவகாரத்திற்கான விடை என்ன என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். அப்படியிருக்க இப்போது படத்தை பிரமோஷன் செய்கிறேன் என ஊர் ஊராக சூர்யா செல்வது சரியா ?, அதற்கான சரியான நேரம் இதுவா என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.
இதுவரை தான் நடித்த படங்களுக்காக எந்த ஊருக்கும் செல்லாத சூர்யா இப்போது 'சி 3' படம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இப்படி போகிறாரோ என கோலிவுட்டிலேயே ஆச்சரியப்படுகிறார்கள்.