ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மான் வேட்டையாடியது தொடர்பாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் நடிகர் சல்மான்கான் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சல்மான்கானும் சர்ச்சையும் பிரிக்கமுடியாத விஷயம். 19 வருடங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் உள்ள கன்கானி கிராமத்திற்கு படப்பிடிப்புக்கு சென்றவர், துப்பாக்கி எடுத்துக் கொண்டு காட்டுக்குள் வேட்டையாட சென்றார். அப்போது இரண்டு மான்களை சுட்டு அதனை எடுத்து வந்தார். அவர் சுட்டது உலக வனயியல் கோட்பாட்டின்படி அரிய வகை மான் இனம். இதனால் வன இலாகாவினர் சல்மான்கான் மீது வழக்கு தொடர்ந்தனர்.
ஜோத்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு 19 ஆண்டுகளாக நடந்து வந்தது. கடந்தவாரம் இறுதிகட்டத்தை எட்டிய வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை 18ந் தேதி வழங்குவதாக தெரிவித்திருந்தார். அதோடு தீர்ப்பு வழங்கப்படும் அன்று சல்மான்கான் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அதன்படி, சல்மான்கான் மீதான வழக்கு இன்று நடந்தது. சல்மான் நேரில் ஆஜரானார். வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் சல்மான் கானை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக கோர்ட் உத்தரவிட்டது. இதன்மூலம் கடந்த 19 ஆண்டுகளாக நடந்த வந்த இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது, இதன்மூலம் சல்மானுக்கும் ஒரு பெரிய விடுதலை கிடைத்திருக்கிறது.
ஏற்கனவே சல்மான் கான், குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கிலும் விடுதலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.