இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சின்னத்திரையில் சீரியல்கள் மற்றும் காமெடி தொடர்களிலும் பங்கேற்று வந்தவர் ஜாங்கிரி மதுமிதா. அதன்பிறகு ஒரு கல் ஒரு கண்ணாடியில் சந்தானத்தின் ஜோடியாக சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து தொடர்ந்து சினிமாவில் காமெடி வேடங்களில் பிசியாகி விட்டபோதும், டிவியிலும் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீசன்-3 மற்றும் காமெடி ஜங்ஷன் நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இதுவரை சினிமாவிலும் காமெடி வேடங்களிலேயே அதிகமாக நடித்துள்ள மதுமிதா, தற்போது சரவணன் இருக்க பயமேன், மோகினி ஆகிய படங்களில் அழுத்தமான வேடங்களில் நடித்துள்ளார். இதில் திரிஷா நடித்துள்ள மோகினி படத்தில் படம் முழுக்க அவருடன் வரும் வேடத்தில் நடித்துள்ள மதுமிதா, முதலில் காமெடியான காட்சிகளில் நடித்தபோதும் பின்னர் சீரியசாக நடித்திருக்கிறாராம். அப்படி நடித்தது எனக்கு வித்தியாசமான எக்ஸ்பீரியன்சாக இருந்தது என்று கூறும் மதுமிதா, இனிமேல் நான் மாறுபட்ட கேரக்டர்களில் நடிப்பதற்கான தொடக்கமாக இந்த மோகினி படம் அமைந்திருப்பதாகவும் கூறுகிறார்.