ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அம்புலி படத்தில் நடித்தவர் ஜோதிஷா. அதையடுத்து சமீபத்தில் வெளியான ஏகனாபுரம் படத்தில் அதிரடியான வில்லியாக நடித்திருந்தார். தற்போது பேய் இருக்கா இல்லையா, மாய மோகினி, கொலுசு சத்தம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களிலுமே நாயகியாக நடித்துள்ள அவர், பேய் இருக்கா இல்லையா படத்தில் நாயகி, அதிரடி பேய் என இரண்டு கெட்டப்பில் நடித்துள்ளார்.
அந்த அனுபவம் குறித்து அவர் கூறும்போது, ஏகனாபுரம் படத்தில் நெகடீவ் ரோலில் நடித்தேன். அந்த வேடம் எனக்கு புதுமையான அனுபவமாக அமைந்தது. அதோடு வில்லியாக நான் நடித்திருந்ததைப் பார்த்து பலரும் பாராட்டினார்கள். ஆக, அந்த வில்லி வேடம் எனக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது. அதையடுத்து, மாயமோகினியில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறேன். மற்ற இரண்டு படங்களிலுமே சிங்கிள் ஹீரோயினாக நடித்துள்ளேன்.
அதில் பேய் இருக்கா இல்லையா படத்தில் நாயகியாக நடித்திருக்கும் நான் பேயாகவும் நடித்துள்ளேன். ரிலீசுக்கு தயாராகி விட்ட அந்த படம் வெளியாகும்போது தமிழ் சினிமாவில் எனக்கென ஒரு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அதோடு, இனிமேல் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று டார்க்கெட் வைக்காமல், ஹீரோயின், வில்லி வேடம், அழுத்தமான கேரக்டர் என்று ஸ்கோப் உள்ள எல்லா வேடங்களிலும் நடிப்பேன். முக்கியமாக, கிளாமர் விசயத் தில் கதைக்கு தேவையான அளவு நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால், ஆபாசமாக நடிக்க மாட்டேன் என்கிறார் ஜோதிஷா.