தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகத்தில் தீவிரம் அடைந்து வரும் நிலையில் ஜல்லிகட்டிற்கு எதிராகவும், பீட்டாவிற்கு ஆதரவாகவும் விஷால் பேசியதாக சில தினங்களாக அவருக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில் இதுப்பற்றி விஷால் மனம் திறந்துள்ளார். விஷால் பேசியதாவது... கிட்டத்தட்ட ஜனவரி 5-ம் தேதியில் இருந்து சமூக வலைதளங்களில் விஷால் ஜல்லிகட்டுக்கு எதிராக பேசினார், பீட்டாவை ஆதரிக்கிறார் என்று கூறி வருகிறார்கள். பீட்டாவின் முழு அர்த்தம் எனக்கு தற்போது தான் தெரிந்தது.
பீட்டாவை நான் ஆதரிக்கவில்லை, பீட்டாவுக்கு நான் விளம்பர தூதரும் இல்லை. இதைப்போன்று புரளியை பரப்புவது தவறான ஒன்றாகும். நான் ஒரு கருத்து சொல்வதென்றால் மைக் பிடித்தோ, பிரஸ் ரிலீஸ் மூலமாகவோ அல்லது என்னுடைய சமூக வலைதளத்தின் மூலமாகவோ நேரடியாக நான் கூறியிருப்பேன். ஜல்லிகட்டை நான் ஆதரிக்கிறேன். ஜல்லிக்கட்டு அடுத்த வருடம் முறையாக நடக்க நானும் களத்தில் இறங்கி போராடுவேன் ஜல்லிக்கட்டு நடக்க தனிப்பட்டமுறையில் முயற்சி செய்து வருகிறேன்.
விஷால் ஜல்லிகட்டை ஆதரிக்கிறார் என்றால் அதை அவர் நேரடியாக கூறினால் தான் அது உண்மையான ஒரு செய்தியாகும். சமூக தளங்களில் உள்ள யாரோ ஒருவர் கூறும் தவறான செய்தி உண்மையான ஒன்றாகாது. இங்கே இளைஞர்கள் போராடுவது கண்டிப்பாக மத்தியில் உள்ள அரசுக்கு கேட்டிருக்கும். கண்டிப்பாக அடுத்த வருடம் ஜல்லிக்கட்டு முறையாக நடக்க மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும். நடிகர் சங்கத்துக்கும், பீட்டாவுக்கும் எந்தவித சமந்தமும் இல்லை. இதை நான் நடிகர் சங்க பொது செயலாளராக கூறி கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.