தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜீவாவுடன் நடிக்க வேண்டாம் என்று சிம்பு, ஒருபோதும் என்னிடம் சொன்னது இல்லை, இதெல்லாம் வெறும் வதந்தி தான் என்று நடிகை ரிச்சா கூறியுள்ளார். தமிழுக்கு வந்திருக்கும் தெலுங்கு புதுவரவு ரிச்சா கங்கோபாத்தியாயே. இவர் தனுஷ் உடன் "மயக்கம் என்ன", சிம்புவுடன் "ஒஸ்தி" படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் இன்னும் ரிலீசாகவில்லை. ஆனாலும் அம்மணிக்கு, தமிழில் ஏகப்பட்ட வரவேற்பு.
இந்நிலையில், சமீபத்தில் நடிகர் ஜீவாவுடன் ஒருபடத்தில் நடிக்க ரிச்சாவுக்கு அழைப்பு வந்ததாகவும், அதில் நடிக்க ரிச்சா முதலில் சம்மதம் தெரிவித்து, பின்னர் முடியாது என்று கூறிவிட்டதாகவும், இதற்கு காரணம் சிம்பு தான் ரிச்சாவை, ஜீவாவுடன் நடிக்க கூடாது என்று கூறியதாகவும் செய்திகள் வந்தது. ஆனால் இதனை ரிச்சா மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஜீவாவுடன் நடிக்க என்னை யாரும் அழைக்கவில்லை. அப்படி இருக்கையில் ஜீவாவுடன் நடிக்க கூடாது என்று என்னை சிம்பு தடுத்ததாக வந்த செய்தி எப்படி உண்மையாக முடியும். அதுவெறும் வதந்திதான். என் படம் தொடர்பான விஷயங்களில் யாரையும் தலையிட விடுவது இல்லை. எனக்கென்று சுயபுத்தி உள்ளது என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே "கோ" படத்தில் ஜீவா நடித்தது முதலே, ஜீவாவுக்கும்-சிம்புவுக்கும் இடையே மோதல் உண்டாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.